'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பண்ணையாரும் பத்மினியும், 'சேதுபதி' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அருண்குமாரும், விஜய் சேதுபதியும் மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள். 'பாகுபலி-2' படத்தை வெளிட்ட எஸ்.என்.ராஜராஜனின் 'கே.புரொடக்ஷன்ஸ்' மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அஞ்சலி இணைந்து நடிக்கிறார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய 'இறைவி' படத்தை தொடர்ந்து மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
இப்படத்தில் வில்லனாக லிங்கா நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை கார்த்திக் கண்ணன் கவனிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படம் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் மலேசியாவில் நடைபெறவிருக்கிறது.