Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மக்கள் அமர சிம்மாசனம் செதுக்கிக் கொண்டிருக்கிறோம் : கமல்

24 ஏப், 2018 - 17:16 IST
எழுத்தின் அளவு:
We-are-making-Throne-for-People-says-Kamal

ஊராட்சிகளில் நடத்தப்படும், கிராம சபை கூட்டம் போல், சென்னையில், மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமல், மாதிரி கிராம சபை கூட்டத்தை நடத்தினார். இதில் கமல் பேசியதாவது....

12,524 கிராமங்கள்

பஞ்சாயத்து சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி கிராம பஞ்சாயத்து கூட்டம் நடக்கிறது. ஒவ்வொரு கிராமத்திற்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் 12,524 கிராமங்கள் உள்ளன. இவ்வளவு பணம் கிராம மக்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

கிராம சபை நினைவுப்படுத்தல்
கிராம சபை கூட்டங்கள் சரிவர நடைபெறாமல் இருப்பதற்கு காரணமே அரசியல் தான். அதிகாரத்தில் இருப்பவர்கள் கிராம சபையை செயல்படுத்தியே ஆக வேண்டும் என்பதை நினைவுபடுத்தவே கூடியிருக்கிறோம். நம்மில் அதிகமானோர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள். கிராமத்துடனான நமது தொடர்பு அனைவருக்கும் உண்டு

எல்லாவற்றுக்கும் தீர்வு
இந்த கிராம சபை என்பது ஊற்று போன்றது. அதை நமது கவனமின்மையால் செயல்படுத்த முடியாமல் போயிற்று. இன்று மக்கள் நீதி மையம் ஆரம்பித்து வைத்திருக்கின்றது. காவிரி பிரச்சனை போன்று அனைத்து பிரச்சனைக்கும் தீர்வுகளை கிராம சபைகளில் எடுக்க முடியும்

4 முறை நடத்த வேண்டும்
ஒவ்வொரு ஆண்டு கட்டாயம் 4 முறை அதாவது, ஜனவரி 26, மே1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கூட்டப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் இந்த கிராம சபைகளை நடத்த வேண்டும் என்பதை நினைவு படுத்துவதற்கு ஒரு கடிதம் மக்கள் நீதி மையம் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பார்லிமென்ட்டே நிறைவேற்றலாம்
சட்டசபை போன்ற இடங்கள் தொடங்கப்பட்டதற்கு முன்னரே இந்த கிராம சபைகள் தொடங்கப்பட்டது. கிராம சபைகளில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு விட்டால் அதை சட்டசபையிலும், பார்லிமென்ட்டிலும் நிறைவேற்ற முடியும். நீதிமன்றங்களும் நமக்கு ஆதரவளிக்கும்.

உயிரை பலி கொடுத்து வளர்ச்சி வேண்டாம்
தொழில் வளர வேண்டும் என்பதில் கிராமங்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் உயிரை பலி கொடுத்து வளர்ச்சி என்பதை எந்த கிராமமும் விரும்புவதில்லை. ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் என நாம் அனைவரும் இந்த சமூகத்தை சரி செய்யவேண்டிய பணியாளர்களே.

கிராம சபைகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மக்கள் நீதி மையத்திடம் சொல்லுங்கள், மக்கள் பணியாளர்களாக நாங்கள் அரசு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை செய்வோம். பஞ்சாயத்து தலைவர்களுக்கும், ஊழியர்களுக்கும் அரசு ஊதியம் கேரளாவில் வழங்கப்படுகிறது. அது போல தமிழகத்திலும் வழங்கப்பட மக்கள் நீதி மையம் முயற்சி எடுக்கும்.

அரசியல் வாழ்வாதரமல்ல, நமது கடமை
அனைவரும் வரும் மே 1 அன்று உங்கள் கிராமங்களில் இருப்பதற்க்கு முயற்சி செய்யுங்கள். நானும் முயற்சிக்கிறேன். கிராமசபைகளில் பங்கேற்பது என்பது ஒருமுறை செய்ய வேண்டியது அல்ல, தொடர்ந்து செய்ய வேண்டியது கடமை. உங்கள் தொழிலை பாதுகாத்துக்கொண்டே அரசியலிலும் ஈடுபடுங்கள். அரசியல் வாழ்வாதரமல்ல, நமது கடமை.

இவ்வாறு கமல் பேசினார்.

செய்தியாளர் ஒருவர் வடமாநிலங்களில் காஸ்டிங் கவுச் பற்றிய கேள்வியை கேட்டபோது, புதிய மக்களுக்கான சிம்மாசனத்தை அமைக்க முயற்சி செய்கிறோம். அனைவரும் அமரக்கூடிய சிம்மாசனத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் படுக்கை சோபாவை பற்றி பேசுவது வருத்தமாக உள்ளது என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in