வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
அல்லு அர்ஜூன் நாயகனாக நடித்துள்ள படம் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னயில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, தமிழ் சினிமாவில் நடிர்களின் சம்பளம் மிக அதிகமாக உள்ளது. இதே நிலை நீடித்தால் நான் தமிழ்நாட்டை காலி பண்ணிவிட்டு ஐதராபாத் சென்று தெலுங்கு படங்களை தயாரிக்கத் தொடங்கி விடுவேன் என்று கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் நடிகர்களின் சம்பளம்தான் என்னைப்போன்ற தயாரிப்பாளர்களுக்கு ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. ஒரு நடிகர் நடிக்கும் படத்திற்கு 100 கோடி வியாபாரம் உள்ளது என்றால், 50 கோடி அவர்கள் சம்பளம் கேட்கிறார்கள். ஆனால் தெலுங்கில் அப்படியல்ல எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் 15 கோடி தான் வாங்குகிறார்கள்.
அந்த அளவுக்கு தெலுங்கு தயாரிப்பாளர், நடிகர்களுக்கிடையே நல்லதொரு புரிதல் உள்ளது. அதனால் தெலுங்கு சினிமாவைப் போன்ற சூழல் தமிழ் சினிமாவிலும் வர வேண்டும். படங்களின் வியாபாரத்திற்கேற்ப நடிகர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும்.
இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்த நிலை தமிழ் சினிமாவில் உருவாகவில்லை என்றால், நான் ஐதராபாத்திற்கு சென்று தெலுங்கு படங்கள் தயாரிக்கத் தொடங்கி விடுவேன் என்கிறார் ஞானவேல்ராஜா.