ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு இரவில் நடக்கும் கதை, ஒரு நாளில், ஒரு மணி நேரத்தில் நடக்கும் கதை என்றெல்லாம் விதவிதமான படங்கள் வந்திருக்கிறது. முதன் முறையாக ஒரே திருவிழாவில் நடக்கும் கதையாக தயாராகி இருக்கிறது பக்கா படம். பேரரசுவின் உதவியாளர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கி இருக்கிறார். வருகிற 27ந் தேதி படம் வெளிவருகிறது. படம் குறித்து இயக்குர் சூர்யா கூறியதாவது:
இந்தப் படத்தின் கதை முழுக்க ஒரு திருவிழாவில் நடக்கிறது. அதனால் படம் முழுக்க வெளிப்புற காட்சிகளாகவே படமாக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம் பிரபு முதன் முறையாக இரண்டு வேடத்தில் நடிக்கிறார். ஒரு திருவிழாவில் ஒரு பிரச்னை ஆரம்பிக்கிறது. அந்த பிரச்னை திருவிழா முடிவதற்குள் எப்படி தீர்க்கப்படுகிறது என்பதுதான் கதை.
இதற்குள் காதல், காமெடி, ஆக்ஷ்ன் என எல்லா அம்சங்களும் இருக்கிறது. காமெடி தூக்கலாக இருக்கும். இரண்டு விக்ரம் பிரபு என்பதால் ஒருவருக்கு நிக்கி கல்ராணியும், இன்னொருவருக்கு பிந்து மாதவியும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர 36 நடிகர், நடிகைகள் நடித்திருக்கிறார்கள். சத்யா இசை அமைத்துள்ளார், சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது விக்ரம் பிரபுவுக்கு முக்கியமான படமாக இருக்கும். எனக்கு என் சினிமா கேரியரை வெற்றியுடன் துவக்கி வைக்கிற படமாக இருக்கும்" என்றார்.