'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'பிரேமம்' சாய்பல்லவி தமிழில் நடித்து முதலில் வரவிருக்கும் படம் 'தியா'. தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே மலையாளம், தெலுங்கில் சில படங்களில் நடித்து அந்த இரு மொழிகளிலும் நல்ல பெயரைப் பெற்றுவிட்டார் சாய்பல்லவி.
ஆனால், தமிழில் அவர் அறிமுகமாகும் 'தியா' படம் வெளிவருவதற்கு முன்பே சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. இப்படத்தில் நடித்துள்ள தெலுங்கு நடிகரான நாக சௌரியா, படத்தின் நாயகி பற்றி குறை கூறும் விதத்தில் பேட்டி அளித்திருந்தார். “மற்றவர்கள் நன்றாக நடித்தால் அதை, சாய் பல்லவியால் பொறுத்துக் கொள்ள முடியாது. செட்டில் அவர் கண்டபடி நடந்து கொள்வார்,” என குற்றம் சாட்டியிருந்தார். அதோடு 'தியா' படத்தின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
நாக சௌரியாவின் குற்றச்சாட்டும் சாய்பல்லவிக்கு ஆச்சரியமாக உள்ளது. “எனக்கும் நாக சௌரியாவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் நல்ல நடிகர், செட்டில் அமைதியாக இருப்பார். என் வேலையைத் தவிர செட்டில் நான் வேறு எதையும் கவனித்ததில்லை. அப்படியிருக்க என் மீது ஏன் இப்படி குற்றம் சாட்டுகிறார் எனத் தெரியவில்லை. நாக சௌரியாவை நான் சில முறை தொடர்பு கொண்டேன். என்னைப் பற்றி ஏன் அப்படி சொன்னார் என தெரிந்து கொள்ள போன் செய்தேன். ஆனால், அவர் போனை எடுக்கவேயில்லை,” எனத் தெரிவித்துள்ளார் சாய் பல்லவி.
தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள இப்படத்தின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் முற்றிலும் புறக்கணித்துவிட்டார் நாக சௌரியா. தமிழில் எவ்வளவோ நடிகர்கள் இருக்கும் போது நாக சௌரியாவை இந்தப் படத்தில் நடிக்க வைக்காமலே இருந்திருக்கலாம் என்றே திரையுலகில் பலரும் பேசிக் கொள்கிறார்கள்.