டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆஸ்திரேலியாவில் கோல்டுகோஸ்டு நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் சதீஷ்குமார் சிவலிங்கம். தமிழ்நாட்டில் உள்ள வேலூரைச் சேர்ந்தவர். இவருக்கு கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். தமிழக அரசு 60 லட்ச ரூபாய் பரிசு அளித்துள்ளது.
சதீஷ்குமார் சிவலிங்கத்தை நேரில் சந்தித்து பாராட்டி அவருக்கு ஒரு பரிசு வழங்கி கவுரவித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த சந்திப்பு குறித்து சதீஷ்குமார் கூறியிருப்பதாவது, “ஒரு அற்புதமான மனிதரைச் சந்தித்தேன். காமென்வெல்த் தங்கப்பதக்கத்துடன் அவரைச் சந்தித்ததை உண்மையில் நேசித்தேன். அவருடைய அன்பான வார்த்தைகள் எனக்கு உண்மையில் மிகவும் ஊக்கமளித்தன. நான் மிகவும் ஆச்சரியப்படும் நட்சத்திரம் அவர். அவருடைய வாழ்க்கைப் பாதையில், கடின உழைப்பால் கொண்டாடப்பட வேண்டியவர். உங்கள் அன்பான பரிசுக்கு மிக்க நன்றி சகோதரா,” என சதீஷ்குமார் சிவலிங்கம், சிவகார்த்திகேயனைப் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.