Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா

22 ஏப், 2018 - 12:28 IST
எழுத்தின் அளவு:
sree-reddy-gave-suggestion-to-government-to-reduce-sexual-offences

கடந்த சில வாரங்களாகவே தெலுங்கு சினிமாவை பதற வைத்து வருபவர் ஸ்ரீரெட்டி. அவரது ஸ்ரீலீக்ஸ் பட்டியலில் அபிராம், கோனா வெங்கட், கொரட்டல சிவா என சிலரது பெயர்கள் வெளியானது. அதையடுத்து டாக்டர் ராஜசேகருக்கு அவரது மனைவி ஜீவிதாவே பெண்களை படுக்கைக்கு அனுப்பி வருவதாக சமூக ஆர்வலர் சந்தியா என்பவர் டிவி சேனல் பேட்டி யில் தெரிவித்ததை அடுத்து அந்த விசயம் வேறு கோணத்தில் திசை திரும்பியது.

இதனால், சந்தியா மீதும், அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்த சேனல் மீதும் வழக்கு தொடரப் போவதாக சொன்ன ஜீவிதா, தான் கணவருக்கு பெண்களை அனுப்பியதாக சொல்லும் சந்தியா அதை நிரூபிக்க வேண்டும் என்று காரசாரமாக பேட்டி கொடுத்தார். அதோடு, தான் 24மணி நேரமும் செக்ஸ் மூடிலேயே இருப்பதாக ஸ்ரீரெட்டி கூறியிருந்த பேஸ்புக் வீடியோ ஒன்றையும் மீடியாக்களுக்கு வெளிச்சம் போட்டார் ஜீவிதா.


அதைத் தொடர்ந்து, ஜீவிதா கேட்ட ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக சொல்லி அவருக்கு ஒரு பெரிய ஷாக் கொடுத்தார் ஸ்ரீரெட்டி.


இப்படியான சூழ்நிலையில், சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற பாலியல் சம்பவங்களுக்கு மரண தண்டனைதான் ஒரே தீர்வு என்று பலரும் கருத்து சொல்லி வந்ததை அடுத்து மத்திய அரசும் அதற்கான சட்டத்தை உருவாக்க தயாராகி விட்டது.


ஆனால் இப்போது ஸ்ரீரெட்டி தனது சார்பில் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் அரசாங்கத்திற்கே ஐடியா கொடுத்துள்ளார். அது என்ன வென்றால், செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள்தான் ஆசிபா போன்ற சிறுமிகளை பலாத்காரம் செய்கிறார்கள். அதனால் அரசாங்கம் சிகப்பு விளக்கு ஏரியாவை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் கற்பழிப்பு கொலைகள் நடப்பது குறை வதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in