மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியர் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய். கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.
சமீபகாலமாக ஐஸ்வர்யாவுக்கும், அபிஷேக்கிற்கும் இடையே சரியான புரிதல் இல்லை என்றும், ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் இருவரும் தனித்தனியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அபிஷேக்கின் செல்போனை எடுத்து, அவர் யார் உடன் எல்லாம் பேசுகிறார் என்பதை ஐஸ்வர்யா ராய் கண்காணித்ததாவும், இதனால் ஐஸ்வர்யா மீது அபிஷேக் கோபப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது ஹிந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதை ஐஸ்வர்யா ராய் மறுத்துள்ளார்.
இதனிடையே அபிஷேக் - ஐஸ்வர்யா தம்பதியருக்கு இன்று(ஏப்., 20) திருமண நாள். 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். இதை வெளிப்படுத்தும் விதமாக அபிஷேக் தன் இன்ஸ்டிராகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டு ஐஸ்வர்யா ராய் உடனான தன் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.