பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர்கள் பலருக்கும் இருக்கும் அரசியல் ஆசை, நடிகர் சிம்புவிடம் கடந்த சில வாரங்களாக அதிகமாகவே காணப்படுகிறது. அதையடுத்துத்தான், எனது மகன் சிம்பு, எல்லா விஷயத்திலும் தெளிவான கருத்துச் சொல்வான்' என, திடுமென நடிகர் சிம்பு குறித்த புகழ் பாடினார் இயக்குநர் டி.ராஜேந்தர்.
தொடர்ந்து காவிரி பிரச்னையில் கருத்துச் சொன்ன சிம்பு, இரு மாநில மக்களும் அன்புடன் இந்த பிரச்னையை அணுக வேண்டும் என, புதிய கோணத்தில் பிரச்னைக்கு தீர்வு சொன்னார். இது, கர்நாடகத்தில் பெருத்த வரவேற்பை பெற்றுவிட, சிம்புவை, தமிழர்கள் தரப்பிலும் வெகுவாக கொண்டாடினர்.
இதற்கிடையில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் இருக்கும் சித்தர் ஒருவர், சிம்புவின் ஜாதகத்தைப் பார்த்து விட்டு, அரசியலில் மிக உயர்ந்த பொறுப்பும்; பதவியும் கிடைக்கும் என சொல்ல, தீவிர அரசியலில் இறங்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறாராம் சிம்பு.
இதனால், வேடசந்தூருக்கு அடிக்க செல்லத் துவங்கி இருக்கும் சிம்பு, சித்தர் என்னவெல்லாம் சொல்கிறாரோ, அதையெல்லாம் செய்யத் துவங்கி இருக்கிறாராம். காவிரி பிரச்னை தொடர்பாக, இந்த விஷயத்தை பேசு என்று, எழுதிக் கொடுத்தது குறிப்பிட்ட அந்த சித்தர்தான் என்பது சிம்பு தரப்பினர் சொல்லும் தகவல்.