இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் பிரகாஷ்ராஜின் தோழியும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட பிறகு தீவிரமான அரசியல் கருத்துக்களை பேச ஆரம்பித்தார் பிரகாஷ்ராஜ். பிரதமர் என்னை விட சிறந்த நடிகர் என்று அதிரடியான கருத்தை சொன்னார். தொடர்ந்து பிரதமர் மோடியையும், பாரதிய ஜனதா கட்சியையும் விமர்சித்து வந்தார்.
இதனால் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அவரை பயன்படுத்திக் கொள்ள நினைத்தது. பலர் மூலம் தூது அனுப்பியது. பிரகாஷ்ராஜ் காங்கிரசில் சேருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, "நான் அரசியலில் ஒரு போதும் ஈடுபடமாட்டேன்" என்ற அறிவித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:
நான் எந்த கட்சிக்கும் சொந்தமானவன் இல்லை. அரசியலுக்கு வரவும் மாட்டேன். ஆனால் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பேன். ஒரு இந்திய குடிமகனாக அது என் கடமை.
ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது அரசின் கடமை. அதைக்கூட இதுவரை இருந்த அரசுகள் செய்யவில்லை. கர்நாடக தேர்தல் நடக்க இருப்பதால் காவிரி மேலாண்மை வாரிய விஷயத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. இரு மாநில மக்களையும் நாடகமாடி ஏமாற்றி வருகிறது.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.