தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் நடிக்கும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்கள் சார்ந்த மொழியிலிருந்து அடுத்த மொழியிலும் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஒரு ஆசையுடன் 'ஸ்பைடர்' படம் மூலம் நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்த தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு தமிழில் அறிமுகமானார்.
ஆனால், அந்தப் படம் தெலுங்குப் படமாகவும் அமையாமல், தமிழ்ப் படமாகவும் அமையாமல் போய்விட்டது என மகேஷ் பாபுவே சமீபத்தில் வருத்தப்பட்டுத் தெரிவித்துள்ளார். படத்தை இரண்டு மொழிகளில் தயாரித்ததுதான் தவறு என்று சொல்லியிருக்கிறார்.
'ஸ்பைடர்' தோல்விக்குப் பிறகு மகேஷ் பாபு நடித்து நேற்று வெளிவந்த 'பாரத் அனி நேனு' படத்திற்கு வெளியீட்டிற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் நன்றாகவே பூர்த்தி செய்துவிட்டது என டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரபரப்பான அரசியல் கதையாக இருக்கும் இந்தப் படம் 'ஸ்பைடர்' தோல்வி வலையிலிருந்து மகேஷ் பாபுவை மீட்டுக் கொண்டுவந்துவிட்டது என்கிறார்கள். கடந்த மாதம் வெளிவந்த ராம்சரண் படமான 'ரங்கஸ்தலம்' படத்தை விடவும் இந்தப் படம் அதிகமான வசூலைக் குவிக்கும் என்றும், நேற்று முதல் நாளிலேயே அதைப் புரிந்துவிட்டது என்றும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.