'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அதிமுகவில் இருந்த ஆனந்தராஜ் ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு கட்சியைவிட்டு வெளியேறினார். இந்நிலையில் ரஜினிகாந்தை, போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று ஆனந்தராஜ் சந்தித்துப் பேசினார்.
'ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால், அவருடன் இணைந்து நீங்கள் பணியாற்றுவீர்களா?' என்ற கேள்விக்குப் பதிலளித்த ஆனந்தராஜ், “முதலில் கட்சி தொடங்குவது குறித்து அவர் முடிவெடுக்கட்டும். அப்படியே அவர் தொடங்கினாலும், அவருடைய பாலோயர்ஸ் நிறைய பேர் இருக்கிறார்கள், மக்கள் இருக்கிறார்கள். முதலில் அவர் முடிவெடுக்கட்டும்” என்று சொல்லி இருக்கிறார்.
இதன் மூலம் ரஜினி கட்சியில் ஆனந்தராஜ் இணையும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.