ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் எந்தவிதமான திரைப்படப் பணிகளும் நடக்கவில்லை. டப்பிங், பின்னணி இசைக்கோர்ப்பு, பாடல் பதிவு, எடிட்டிங், கிராபிக்ஸ் என அனைத்து வேலைகளும் நிறுத்தப்பட்டது. ஒரு சில இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பு வேலைகள் கூட கடும் எதிர்ப்பால் உடனடியாக நிறுத்தப்பட்டன.
திரையுலகத்தினருடன் அரசு தரப்பில் கடந்த 17ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின் நடந்த சுமூக உடன்பாட்டின்படி வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இன்று முதல் படங்களின் வெளியீடு, படப்பிடிப்புகள், இதர பணிகள் ஆகியவை ஆரம்பமாகின.
ஒரு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள் இன்று முதல் ஆரம்பமாவதால் பல ஸ்டுடியோக்களில் வேலைகள் இடைவிடாமல் நடக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதனால் பல ஸ்டுடியோக்கள் அடுத்த சில மாதங்களுக்கு மிகவும் பிஸியாக இருக்கும்.
இயக்குனர் சீனுராமசாமி இன்று முதல் அவருடைய 'கண்ணே கலைமானே' படத்தின் டப்பிங்கை ஆரம்பித்துள்ளார். இது போல் மேலும் பல பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.