'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள் என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெறுவார்கள்.
2018ம் ஆண்டுக்கான மிகுந்த செல்வாக்கு பெற்ற 100 பேர் பட்டியலில் இந்தியர்களான விராட் கோலி, தீபிகா படுகோனே, ஓலா இணை-நிறுவனர் பவிஷ் அகர்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.
தீபிகா படுகோனே இந்திப் படங்களிலிருந்து ஹாலிவுட் படங்கள் வரை சென்றுவிட்டார். அவரைப் பற்றிய தகவலை அவருடன் நடித்த ஹாலிவுட் நடிகரான வின் டீசல் தான் எழுதியிருக்கிறார். “தீபிகா இந்தியாவிற்கு மட்டும் பிரதிநிதியாக இல்லை, இந்த உலகத்தின் பிரதிநிதியாக இருக்கிறார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தீபிகா நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'பத்மாவத்' படம் பெரிய வெற்றியைப் பெற்றது.