இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஸ்டிரைக்கால் சினிமா தொழிலாளர்களுக்கு 50 கோடி வரை இழப்பு ஏற்பட்டது என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: பெப்சி அமைப்பில் உள்ள 22 சங்கங்களில் 12 சங்கங்கள் ஒப்பந்த அடிப்படையிலும், 10 சங்கங்கள் தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றி வருகிறது. சினிமா ஸ்டிரைக்கால் தொழிலாளர்களுக்கு 50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இனி படப்பிடிப்புக்கு பெப்சி தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் முன் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையான ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். எவ்வளவு சம்பளம், எத்தனை நாள் படப்பிடிப்பு நடக்கும் என்பது போன்ற விஷயங்கள் ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும்.
தயாரிப்பாளர் சங்கம் கையெழுத்திட்ட படிவம் கிடைத்த பிறகு பெப்சி தொழிலாளர்கள் பணிக்குச் செல்வார்கள். அதேப்போல தினக்கூலி பணியாளர்களுக்கு படப்பிடிப்பு முடிந்ததும் அன்றைக்கே சம்பளம் கொடுத்து விட வேண்டும். திரைப்பட நல வாரியம் அமைந்தால் அதன்மூலம் திரைப்படத் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். எனவே அரசு வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்றார்.