டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள படங்களில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது தமிழ் திரையுலகில் முன்னனி நாயகியாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். பழம் பெரும் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தயாராகியுள்ள, நடிகையர் திலகம் படத்தில் தற்போது நடித்து உள்ளார். தன் திரையுலக அனுபவங்கள் குறித்து, அவர் கூறியதாவது:
நீங்கள் இன்னும், ஹோம்லியாகவே நடிக்கிறீர்கள்; எப்போது கிளாமருக்கு மாறுவீர்கள்?
கிளாமருக்கு வாய்ப்பே இல்லை. ரசிகர்களுக்கு, நான், ஹோம்லியாக நடிப்பது தான் பிடித்துள்ளது. கிளாமராக நடிக்கவே மாட்டேன்.
அடுத்தடுத்த படங்களுக்கு நிறைய இடைவெளி ஏன்?
நல்ல கதையம்சம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பதால், இடைவெளி ஏற்பட்டிருக்கலாம்.
மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து நடிப்பது பற்றி...?
ரொம்பவே சந்தோஷமாக உள்ளது. அவர் ரொம்ப அமைதியாக இருப்பார். படப்பிடிப்பில் நடக்கும் அத்தனை விஷயங்களையும், அவர் கவனிப்பார். அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
அடுத்தடுத்து இரண்டாம் பாகம் படங்களில் நடிப்பது குறித்து?
முதல் பாகத்தில் நடித்துள்ள கதாநாயகியர் எடுத்த பெயரை தாண்டி, இரண்டாம் பாகத்தில் நடிக்கும் நாம், பெயர் எடுப்பது என்பதை விட, சமமாக நடிப்பதே சவாலான காரியம் தான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்கிறீர்கள்; எந்த மொழியில் வரவேற்பு அதிகம் உள்ளது?
இப்படியெல்லாம் கேட்டால் எப்படி பதில் சொல்வது; மலையாளத்தில் துவங்கி, தமிழிலும், தெலுங்கிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்; அவ்வளவு தான்.
சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படம் குறித்து?
படம் துவங்கும்போது எனக்கு நம்பிக்கை இல்லை. இயக்குனரும், தயாரிப்பாளரும் தான் நம்பிக்கை கொடுத்து, நடிக்க வைத்தனர். சாவித்திரி மேடத்தின் ஒவ்வொரு அசைவையும், எனக்கு, வீடியோவாக பதிவு செய்து கொடுத்தனர். அப்படியே அதை மனப்பாடம் செய்ய முடியாது. அவங்க நடிப்பை உள்வாங்கினேன். அவர்கள் நடித்த படங்களை பார்த்துள்ளேன். அவர்களின் ஸ்டைலை தெரிந்தபின், எனக்கு, ஐடியா கிடைத்தது; அதன்படி, முடிந்த வரை சிறப்பாக செய்தேன். இந்த படத்தில் எனக்கு, 120 உடைகள் உள்ளன. நான்கு, கெட்டப் கள் உள்ளன. வெவ்வேறு காலத்தில் சாவித்திரி மேடத்தின் வாழ்க்கையை சொல்வதால், படத்தில் நடிக்கும்போது, பல சிரமங்களை சந்திக்க வேண்டியது இருந்தது.
அம்மாவும் படப்பிடிப்புக்கு வருவாரா?
மலையாளத்தில் முதல் படத்தில் நடிக்கச் சென்ற போது, லைட் பாய் முதல், அனைவரையும் ஒரே மாதிரி பார் என்றார். நேரம் தவறாமையை பற்றி அதிகம் சொல்வார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரமாட்டார். தனியாக தான் போவேன். ஆனால் நான் நடிக்கும் எல்லா படத்தையும், என் குடும்பத்தினர் ஒரு முறையாவது வந்து பார்ப்பர்.
சிவகார்த்திகேயன் உடன் மீண்டும் எப்போது நடிப்பீர்கள்?
தெரியவில்லை, அதற்கான வாய்ப்பு விரைவில் வரும் என்று நம்புகிறேன்.
கைவசம் உள்ள படங்கள்?
சாமி-2, சண்டகோழி-2, விஜய்-62 படங்களில் நடித்து வருகிறேன். இதுதவிர வேறு படங்களில் கமிட்டாகவில்லை. மகாநதி படம் அடுத்து ரிலீஸாகிறது. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளிவருகிறது. கடந்தாண்டு சிறப்பாக அமைந்தது, இந்தாண்டும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.