சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
இசையமைப்பாளராக இருந்த ஜிவி.பிரகாஷ், நடிகரான பிறகு சமூக சார்ந்த விஷயங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு, விவசாயம், ஹெட்ரோ கார்பன், மீத்தேன், நீட், ஸ்டெர்லைட், காவிரி என பல விஷயங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனிதா என்ற மாணவி இறந்தபோது அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் புதிய ஆப் ஒன்றை உருவாக்கி வருகிறார் ஜிவி.
இதுகுறித்து ஜிவி.பிரகாஷ் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... நீட் எனும் அரக்கனால் தங்கை அனிதாவை இழந்தோம். அனிதாவின் வீட்டிற்கு சென்றபோது இனி ஒரு அனிதாவை நீட்டால் பறி கொடுக்கக்கூடாது என முடிவெடுத்தேன்.
என் நண்பர்களுடன் பேசி வல்லுநர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து நீட் தொடர்பாக மூன்று மாதமாக வரைவு திட்டத்தை தயாரித்து, தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்கள் இலவசமாக பயன்பெறும் வகையில் மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கி வருகிறோம்.
தகுதியான மதிப்பெண்கள் இருந்தும், பணம் என்ற ஒரு காரணத்தால் எந்த மாணவரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக எங்களால் முடிந்த முயற்சி இது. இன்னும் சில மாதங்களில் இந்த ஆப் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வரும். ஆப் உருவாக்க உதவும் எனது குழுவிற்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறு ஜிவி.பிரகாஷ் கூறியுள்ளார்.