தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உறைய வைத்தது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும், குறிப்பாக மரண தண்டனை வழங்க வேண்டும் என கூறினார் நடிகை வரலட்சுமி.
இந்நிலையில், தற்போது இணையதளத்தில் ஒரு வயதான முதியவர், தனது பேத்தி வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதையடுத்து அந்த முதியவரை மக்கள் அடித்து உதைக்கிறார்கள். இதைப்பார்த்த வரலட்சுமி மேலும் கொதித்துப் போயிருக்கிறார்.
அதோடு, பிரதமர் மோடிக்கு டுவிட்டர் வாயிலாக ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், இதுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகமா? இந்தமாதிரி நாட்டைத்தான் நீங்கள் ஆளவேண்டுமென்று விரும்பினீர்களா பிரதமர் மோடி அவர்களே. உங்களுக்கு வாக்களித்த மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து, பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.