ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னையில் பிறந்து, வளர்ந்து படித்தவரான மகேஷ் பாபுவுக்கு தாய் மொழியான தெலுங்கில் மட்டும் நடித்தால் போதாது, பிறந்த வளர்ந்த ஊரின் மொழியிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை நம்பி 'ஸ்பைடர்' படத்தில் இறங்கினார். ஆனால், அதன் பின் மகேஷ்பாபுவுக்கு அப்படி ஒரு எண்ணமே வரக் கூடாத அளவிற்கு படு மோசமான ஒரு படத்தைக் கொடுத்துவிட்டார் முருகதாஸ்.
அந்தப் படத் தோல்விக்குப் பிறகு கடந்த சில மாதங்களாக பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் இருந்தார் மகேஷ்பாபு. அவர் அடுத்து நடித்துள்ள 'பரத் அனி நேனு' படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அந்தப் படத்திற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது 'ஸ்பைடர்' படத்தின் தோல்வியைப் பற்றி ஏதாவது யோசித்தீர்களா என்று கேட்டதற்கு, 'அப்படியெல்லாம் செய்யும் பழக்கமில்லை' என்று பதிலளித்திருக்கிறார் மகேஷ் பாபு.
ஆசையாக வந்தவரை இப்படி ஒரேயாக ஓட வைத்துவிட்டாரே முருகதாஸ். இனி, தமிழ்ப் படங்களில் நடிக்கும் ஆசையே மகேஷ் பாபுவுக்கு போய்விட்டிருக்குமே....!