டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்குமான மொத்த செலவே 300 கோடி தான் என்று பேச்சு உண்டு. படத்தை பெரும்பாலும் அரங்கில், கிரின் மேட்டில் எடுத்ததால் அவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படத்தை எடுக்க முடிந்து என்ற தகவல் உண்டு. ஆனால், படத்தின் பட்ஜெட் என்ன என்பதை இதுவரை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்தியாவில் அதிக பட்ஜெட் படமாக 400 கோடி ரூபாய் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' படம்தான் எடுக்கப்பட்டு வருகிறது.
ராஜமௌலி அடுத்து ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோரை வைத்து எடுக்க உள்ளார். இப்படத்திற்கான கதை எழுதும் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாம். படத்திற்கான பட்ஜெட்டாக சுமார் 300 கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளார்களாம்.
சரித்திரப் படத்தை எடுக்கவும், சயின்ஸ் பிக்ஷ்ன் படத்தை எடுக்கவும் 300 முதல் 400 கோடி ஆகும். அப்படியென்றால் ராஜமௌலி அடுத்து எடுக்கப் போகும் படம் என்ன மாதிரியான படம், அதற்கு ஏன் 300 கோடி ரூபாய் பட்ஜெட் என்று பலரும் யோசித்து வருகிறார்களாம்.
எவ்வளவு செலவு செய்தாலும் படத்திற்கு பூஜை போடும் அன்றே படத்தை வியாபாரம் செய்துவிடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.