கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஷாலினி பாண்டே. இப்போது தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 100 சதவிகித காதல் படத்திலும், ஜீவா ஜோடியாக கொரில்லா படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர இன்னும் சில படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் தனக்கு கிராமத்து பெண் கேரக்டரில் நடிக்க ஆர்வம் இருப்பதாக கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தமிழ் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கிராமத்து வாழ்க்கை. தற்போது, நான் நடித்து வரும் படங்கள் நகரத்து வாழ்க்கை தொடர்பானது. தமிழ்நாட்டு கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணி, சேலை அணிந்து நடிக்க ஆசையாக இருக்கிறது. அது தொடர்பான கதை வந்தால் உடனே ஒப்புக் கொள்வேன்.
இவ்வாறு கூறியிருக்கிறார் ஷாலினி பாண்டே.