டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவருக்கு ஆதரவாக பல நடிகைகளும், பெண்கள் அமைப்பினரும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த ஸ்ரீரெட்டி, "நடிகர் பவன் கல்யாண் பாலியல் புகார்களை பொது இடங்களில் சொல்ல வேண்டாம். போலீசில் புகார் செய்யலாம் என்றார். அவரது அறிவுரைக்கு நன்றி. அவரை அண்ணாக நினைத்தேன். அதற்காக என்னை நானே செருப்பால் அடித்துக் கொள்கிறேன்" என்றார். இப்படிச் சொன்னதோடு தன்னை தானே செருப்பாலும் அடித்துக் கொண்டார்.
இதற்கு பவன் கல்யாணின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஸ்ரீரெட்டிக்கு எதிராக கருத்து கூறி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நடிகை மாதவி லதா தலைமையில் பவன் கல்யாண் ரசிகர்கள் ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை முன் ஸ்ரீரெட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஸ்ரீரெட்டிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். போலீசார் விரைந்து வந்து அவர்களை கலைந்து செல்ல சொன்னார்கள். அவர்கள் மறுத்ததால் மாதவி லதா மற்றும் பவன் கல்யாண் ரசிகர்களை கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.