டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமா ஸ்டிரைக் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசின் கவனத்தை திசைதிருப்ப ஐபிஎல் போட்டியை நிறுத்தியது போன்று படங்கள் வெளியீட்டையும் நிறுத்தி வைக்கலாமே" என்று உதயநிதி டுவிட் செய்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கத்தானே ஐபிஎல் போட்டியை நிறுத்தினார்கள். அதேமாதிரி படங்களின் வெளியீட்டையும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை நிறுத்தினாலும் கவனம் ஈர்க்கலாமே..? ஏனென்றால், படம் வெளியாகி மக்கள் கொடுக்கும் டிக்கெட் பணத்தில் இருந்து வரி செலுத்துகிறோம். அதனால், பட வெளியீட்டையும் நிறுத்தி மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கலாமே என்று டுவீட் போட்டேன்.
ஐபிஎல் விளையாட்டு பொழுதுபோக்கு என்றால், சினிமாவும் பொழுதுபோக்குத்தானே. படமில்லை என்பதால் டுவீட் போடுகிறார்' என்கிறார்கள். 3 படங்களைத் தயாராக வைத்திருக்கிறேன். அதில், 2 படங்கள் ரிலீஸுக்குத் தயாராக உள்ளன. எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தெரிவிக்கத்தான் செய்வார்கள். பட வெளியீட்டை நிறுத்தலாமே என்று நான் சொன்னவுடன் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கேட்டுவிடுவார்களா என்ன? நான் கூறியது என் தனிப்பட்ட கருத்து. எப்போதுமே என்மீது காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் இருக்கிறார்கள். அதற்குக் காரணம், அரசியல்தான். என்கிறார் உதயநிதி.