தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லை குறித்து அம்பலப்படுத்தி வருகிறார். இதில் சிக்கியவர்களில் கொரட்டலா சிவாவும் ஒருவர். ஸ்ரீரெட்டியின் புகாருக்கு இவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், என் மீது ஸ்ரீரெட்டி கூறிய குற்றச்சாட்டை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அதிலிருந்து இன்னும் மீளவில்லை. எனது படங்களிலும் சரி, எனது படங்களில் நடித்த நடிகைகளிடமும் சரி நான் மிகவும் கண்ணியத்துடன் நடந்து வருகிறேன். என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் தெரியும்.
எனது படங்களில் பெண்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளையும் நான் வைப்பதில்லை. பெண்களுக்கு தனி மரியாதை கொடுத்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், நடிகைகளுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தலுக்கு எதிராக போராடும் நடிகைகளுக்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார் கொரட்டலா சிவா.