ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் எப்படி அம்மா நடிகை என்றால் நம்பர் ஒன் இடத்தில் சரண்யா பொன்வண்ணன் இருக்கிறாரோ, அப்படி ஒரு இடத்தை மலையாள சினிமாவில் பிடிக்க பரபரவென பம்பரமாக சுழல்கிறார் சீனியர் நடிகை சாந்தி கிருஷ்ணா. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் தமிழில் 'பன்னீர் புஷ்பங்கள்' என்கிற படம் மூலமாக பிரபலமானவர் தான் சாந்தி கிருஷ்ணா.
பல ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்திற்காக சினிமாவை இரண்டுமுறை உதறிய இவர், இப்போது மீண்டும் சினிமா தான் தனது வாழ்க்கை என முடிவெடுத்துள்ளார். 51 வயதான இவர், இப்போது மலையாள சினிமாவில் அம்மா, அக்கா வேடங்களை குறிவைத்துள்ளார். அந்தவகையில் இவருக்கு நிவின்பாலியின் நடிக்கும் 'ஞண்டுகளுட நாட்டில் ஓரிடவேள' என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது
அதில், அவரது நடிப்பிற்கு வரவேற்பு கிடைக்கவே, சமீபத்தில் வெளியான 'குட்டநாடன் மர்பாப்பா' படத்தில் குஞ்சாக்கோவின் அம்மாவாக நடித்திருந்தார். அடுத்தததாக வினீத் சீனிவாசனின் அம்மாவாக நடித்துள்ள 'அரவிந்தண்டே அதிதிகள்' என்கிற படம் வரும் ஏப்-27ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதுதவிர இன்னும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சாந்தி கிருஷ்ணா.