இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த பிப்ரவரி மாதம் மனதை உலுக்கிய சம்பவம் என்றால் கேரளாவில் அட்டப்பாடி பகுதியில் மது என்கிற ஆதிவாசி இளைஞரை அரிசி திருடியதாக கருதி சிலர் அடித்தே கொன்றார்களே, அதுவாகத்தான் இருக்கும். அனைவரையும் உலுக்கிய இந்த பரிதாப நிகழ்வு காலப்போக்கில் மறக்கப்பட்டு வருகிறது..
இந்தநிலையில் நடிகை மஞ்சு வாரியர் சமீபத்தில், தனது மஞ்சு வாரியார் நற்பணி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சித்திரை விஷு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அட்டப்பாடி பகுதிக்கு சென்றிருந்தார். அந்த பகுதி மக்களுக்கு தன் கையால் அருமையான விருந்தும் பரிமாறி அவர்களை சந்தோஷப்படுத்தினார்.
மேலும் மதுவின் மரணத்தால் பாதிக்கப்பட்ட அவரது தாய் மல்லி மற்றும் மதுவின் சகோதரிகள் ஆகியோராய் சந்தித்து தனது ஆறுதலையும் கூறினார் மஞ்சு வாரியர். பாதிக்கப்பட்ட மக்களுடன் அவர்களது துக்கத்தில் பங்கெடுப்பதுடன், அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் விதமாகவே இதுபோன்ற கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாராம் மஞ்சு வாரியர்.