பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'தரமணி' படத்தில் கதாநாயகனாக நடித்தவர் வசந்த் ரவி. பிரபல ஹோட்டல் அதிபரின் மகனான இவர், தரமணி படத்தை அடுத்து புதிய படத்தில் நடிக்க உள்ளார். 'ஆரண்யகாண்டம்' படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா மற்றும் புஷ்கர் காயத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் அருண் மாதேஸ்வரன்.
இவர் இயக்கும் புதிய படத்தில் தான் வசந்த் ரவி அடுத்து ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் நடிகை ரோகிணி நடிக்கிறார். விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.
இந்த படத்திற்கு 'தர்புகா' சிவா இசை அமைக்கிறார். 'ஜில் ஜங் ஜக்' மற்றும் 'அவள்' ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.