பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்த் திரையுலகத்தில் நடந்து வந்த பிரச்சினைகளுக்கு நேற்றுடன் ஒரு விடிவு காலம் பிறந்தது. தமிழக அரசும், பிரச்சினைகளால் பிரிந்திருந்த தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், டிஜிட்டல் நிறுவனங்கள் ஆகியவை நேற்று கூடிப் பேசி ஒரு சுமூக உடன்பாட்டுக்கு வந்துள்ளார்கள்.
எதிர்காலத்தில் இதன் நடைமுறை எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்து தான் மீண்டும் பிரச்சினைகள் ஆரம்பமாகாமல் இருக்கும். தயாரிப்பாளர் தரப்பில் பேசியவர்கள் இனி, எந்தப் பிரச்சினை வந்தாலும் அரசுடன் பேசுவதற்கான ஒரு வாய்ப்பை நேற்றைய கூட்டம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்கிறார்கள்.
இதனிடையே, கடந்த 9 வாரங்களாக இல்லாத புதிய படங்களின் வெளியீடு வரும் ஏப்ரல் 27ம் தேதி முதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார வெள்ளிக் கிழமைக்கு இடையில் ஒரே நாள் தான் இருப்பதால் அதற்குள் புதிய படங்களை உடனடியாக வெளியிட முடியாது. நேற்று பேசியபடியான விஷயங்களை நடைமுறைப்படுத்த இரண்டு - மூன்று நாட்களாகி விடும். எனவே, அடுத்த வாரம் முதல் வெளியீடு இருக்கும் என்கிறார்கள்.
இத்தனை நாட்கள் போராடியதற்கு தயாரிப்பாளர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்பதுதான் பெரும்பாலான தயாரிப்பாளர்களின் கருத்தாக உள்ளது. விஷாலின் வைராக்கியமும், போராடும் குணமும் தான் இதற்கு வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது என சீனியர் தயாரிப்பாளர்களும் பாராட்டி வருகிறார்களாம்.
தயாரிப்பாளர்களின் இந்த ஒற்றுமை தொடர்ந்தால் திரையுலகிற்கும் நல்லதே நடக்கும் என பலரும் கருத்து சொல்லி வருகிறார்கள். அது அனைத்தும் அவர்களின் கையில்தான் உள்ளது.