'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு நிகழும் பாலியல் தொல்லை பற்றி நடிகை ஸ்ரீரெட்டி பற்ற வைத்த நெருப்பு, காட்டுத்தீயாக பரவி, தெலுங்கு சினிமாவை சுடத் தொடங்கி உள்ளது. பல பிரபலங்களின் பெயர்களை ஸ்ரீரெட்டி அம்பலப்படுத்தி வருகிறார்.
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பல இளம் மற்றும் சீனியர் நடிகைகளும் களம் இறங்கி உள்ளனர். இருதினங்களுக்கு முன்னர் அபூர்வா, சுனிதா ரெட்டி, ஹேமா போன்ற பல நடிகைகள் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடிகைகளுக்கு நிகழும் பாலியல் கொடுமைகள் குறித்து கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கு சேனல் ஒன்றில் விவாதம் நடந்தது. அதில் பங்கேற்ற சமூக ஆர்வலர் சந்தியா ஒரு அதிர்ச்சிகரமாக தகவல் வெளியிட்டார்.
நடிகை ஜீவிதா, தனது கணவர் ராஜசேகரின் செக்ஸ் ஆசைக்காக பல இளம் பெண்களை அனுப்பி வைத்துள்ளார். அமீர்பேட் பகுதியில் வேலை பார்க்கும் பெண்களை ஜீவிதா மிரட்டி பணிய வைத்திருக்கிறார் என தெரிவித்திருக்கிறார்.
ஜீவிதா மறுப்பு
தற்போது இந்த சம்பவம் தெலுங்கு சினிமாவில் பூதாகரமாக வெடித்திருக்கிறது. ஆனால் இதை ஜீவிதா மறுத்துள்ளார். இதுப்பற்றி செய்தியாளர்களை சந்தித்த ஜீவிதா, சந்தியா ஆதாரமில்லாமல் என் மீதும் என் கணவர் மீதும் குற்றம் சுமத்துகிறார். அவர் மீதும், விவாத நிகழ்ச்சி நடத்திய டிவி மீதும் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் பிரபலங்கள் மீது புகார் கூறும் பெண்கள் அனைவரும் குழந்தைகள் கிடையாது. 20 வயதை கடந்தவர்கள் அவர்களுக்கு எல்லாம் தெரியும்.
ஸ்ரீரெட்டிக்கு என்ன தேவை என்று தெரியவில்லை. ஸ்ரீரெட்டி பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ இது என்று செய்தியாளர்களிடம் ஒரு வீடியோவை காண்பித்தார் ஜீவிதா. அதில் ஸ்ரீரெட்டி, 24 மணிநேரமும் செக்ஸி மூடில் நான் இருக்கிறேன் என்கிறார். இதை பார்த்த பிறகு கூடவா ஸ்ரீரெட்டியின் பேச்சை நம்புகிறீர்கள் என ஜீவிதா காட்டமாக கூறினார்.
போலீசில் புகார்
சந்தியாவின் குற்றச்சாட்டு பொய்யானது என கூறி அவர் மீதும், டிவி சேனல் மீது ஐதராபாத் போலீஸில் புகார் அளித்துள்ளார்.