வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகராக மாறினார் பிரபாஸ். அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. விரைவில் சீனா நாட்டில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் 'சாஹோ' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுத்து வருகிறார்கள். கடந்த வருடம் ஜுன் மாதம் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு மெதுவாகவே நடந்து வருகிறது. இந்த வருடக் கடைசி அல்லது அடுத்த வருடத் துவக்கத்தில் தான் படம் வெளியாகும் என்கிறார்.
'சாஹோ' படத்தின் ஹிந்தி உரிமையை தற்போது பிரபல நிறுவனமான டி சீரிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 120 கோடி ரூபாய்க்கு அந்த நிறுவனம் வாங்கியுள்ளதாம். படத்தின் மொத்த பட்ஜெட்டே 200 கோடிதான் என்கிறார்கள். அப்படியிருக்க அந்த நிறுவனம் அவ்வளவு தொகையைக் கொடுத்து ஹிந்தி உரிமையை வாங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது. 500 கோடிக்கும் மேல் 'சாஹோ' படம் வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.