கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தமிழில் புதிதாக தொடங்கப்பட்ட சேனல் கலர்ஸ் தமிழ். இந்த சேனலின் விளம்பர தூதராக இருக்கிறார் ஆர்யா. இந்த சேனலின் ஓப்பனிங் அட்ராக்ஷ்னுக்காக ஆர்யாவை வைத்து எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஆர்யா, தான் மணந்து கொள்ளப்போகும் பெண்ணின் சுயவம்வர நிகழ்ச்சி இது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 7 ஆயிரம் இளம் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் இருந்து 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கியதுமே பல பெண்கள் அமைப்பு இந்த நிகழ்ச்சி பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என எதிர்த்தனர். அதனையும் மீறி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு கஷானா, அகார்தா, சீதாலட்சுமி ஆகியோர் தேர்வானார்கள். இதில், ஆர்யா, சீதாலட்சுமியை மணமகளாக தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆர்யா யாரையுமே தேர்வு செய்யவில்லை.
யாராவது ஒருவரை தேர்வு செய்தால் மற்றவர்கள் மனம் புண்படும், அவர்கள் குடும்பத்தினர் வருத்தப்படுவார்கள் என்று காரணம் கூறி யாரையும் தேர்வு செய்யாமல் நிகழ்ச்சியை முடித்தார் ஆர்யா.
இந்த முடிவும், நிகழ்ச்சியும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.