மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
டிஜிட்டல் கட்டண குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திரைத்துறையினர் 45 நாட்களுக்கும் மேலாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இதை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில், தியேட்டர் அதிபர்கள், டிஜிட்டல் நிறுவன நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பல விஷயங்கள் ஆராயப்பட்டன. சில காரசாரமான விவாதங்களும் நடந்தன. இறுதியில் ஒரு சுமூக உடன் பாடு ஏற்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டிரைக் உடனடியாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதிய படங்கள் ரிலீஸாவது இரண்டு நாளில் முடிவாகும். இனி படப்பிடிப்பு, அதை சார்ந்த விஷயங்கள் அனைத்து நடைபெறும் என்றார்.