ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
டிஜிட்டல் கட்டண குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திரைத்துறையினர் 45 நாட்களுக்கும் மேலாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இதை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில், தியேட்டர் அதிபர்கள், டிஜிட்டல் நிறுவன நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பல விஷயங்கள் ஆராயப்பட்டன. சில காரசாரமான விவாதங்களும் நடந்தன. இறுதியில் ஒரு சுமூக உடன் பாடு ஏற்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டிரைக் உடனடியாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதிய படங்கள் ரிலீஸாவது இரண்டு நாளில் முடிவாகும். இனி படப்பிடிப்பு, அதை சார்ந்த விஷயங்கள் அனைத்து நடைபெறும் என்றார்.