விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
காஷ்மீர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். திரைத்துறையினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டன்ட் யூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, சிறுமி மரணம் குறித்து கேட்கும்போதே மனம் கலங்குகிறது. சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை பார்த்தால் ஆத்திரம் வருகிறது. பெண் குழந்தைகளை வளர்க்க பாடம் எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது என்றார்.