சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான 'மெர்க்குரி' படம், உலகம் முழுவதும் ரிலீஸாகிவிட்டது. சைலண்ட் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டம் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் ரிலீஸாகவில்லை.
இந்நிலையில், மெர்குரி படம் இணையதளத்தில் வெளியானதோடு, திருட்டு டிவிடியாகவும் புழங்க ஆரம்பித்தது. இதனால் தமிழில் படத்தை வெளியிடும்போது வசூல் பாதிக்கப்படும் என்பதால் 'தயவுசெய்து திருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள்' என வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரபுதேவா.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டிருகிறார்.
“எல்லாருக்கும் வணக்கம். ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் 'மெர்க்குரி' ரிலீஸாகியுள்ளது. எல்லாருக்கும் பிடித்திருக்கிறது; நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. வேலை நிறுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் ரிலீஸாகவில்லை. ஆனால், சீக்கிரம் ரிலீஸாகிவிடும். அதுவரைக்கும் நீங்கள் பைரசி, திருட்டு விசிடி இந்த மாதிரியெல்லாம் படம் பார்க்காமல், தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் உங்களுக்காகப் புதிதாக யோசித்து, புதுவிதமான படத்தை கொடுத்திருக்கிறார். அதேமாதிரி தயாரிப்பாளரும் அவ்வளவு பணம் போட்டு, டீம் ஒர்க்கா இரண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணியிருக்காங்க. திருட்டு விசிடியில் படம் பார்க்காமல், தியேட்டருக்கு வந்து பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார் பிரபுதேவா.