பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஸ்டன்ட் யூனியன் துவங்கப்பட்ட 51வது தினம் சென்னை வடபழனியில் கொண்டாடப்பட்டது. இதில் விஜய் சேதுபதி, விக்ரமன், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கண் சிகிச்சை முகாம் உள்ளிட்ட இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஏராளமான கலைஞர்கள் ரத்ததானம், கண்தானம் செய்தனர்.
நடிகர் விஜய் சேதுபதியும் ரத்ததானம் செய்து ஆச்சர்யப்படுத்தினார். பின்னர் பேசிய விஜய் சேதுபதி, படப்பிடிப்பின் போது சண்டைக்காட்சிகளில் எங்களுக்காக எவ்வளவோ ரத்தத்தை நீங்கள் இழந்துள்ளீர்கள். உங்களுக்காக இந்த விழாவில் நானும் கலந்து கொண்டு ரத்ததானம் செய்ததை நன்றிக்கடனாக நினைக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் இதுப்போன்று மற்றவர்களையும் செய்ய வலியுறுத்துவேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டன்ட் கலைஞர்களின் மூத்த உறுப்பினர்கள் 6 பேர் கவுரவிக்கப்பட்டனர்.
சங்கத்திற்கு புதிதாக WWW.SISDSAU.COM என்ற இணையதளமும் துவங்கப்பட்டது.
இந்த சங்கத்திற்கு தயாரிப்பாளர் தாணு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார்.
விழாவில் பேசிய இயக்குநர் விக்ரமன், ஸ்டன்ட் காட்சிகளில் சற்று நிதானத்தை கடைபிடியுங்கள். ரத்ததானம், கண்தானம் செய்த அனைவருக்கும் நன்றி என்றார்.