தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஸ்டன்ட் யூனியன் துவங்கப்பட்ட 51வது தினம் சென்னை வடபழனியில் கொண்டாடப்பட்டது. இதில் விஜய் சேதுபதி, விக்ரமன், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கண் சிகிச்சை முகாம் உள்ளிட்ட இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஏராளமான கலைஞர்கள் ரத்ததானம், கண்தானம் செய்தனர்.
நடிகர் விஜய் சேதுபதியும் ரத்ததானம் செய்து ஆச்சர்யப்படுத்தினார். பின்னர் பேசிய விஜய் சேதுபதி, படப்பிடிப்பின் போது சண்டைக்காட்சிகளில் எங்களுக்காக எவ்வளவோ ரத்தத்தை நீங்கள் இழந்துள்ளீர்கள். உங்களுக்காக இந்த விழாவில் நானும் கலந்து கொண்டு ரத்ததானம் செய்ததை நன்றிக்கடனாக நினைக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் இதுப்போன்று மற்றவர்களையும் செய்ய வலியுறுத்துவேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டன்ட் கலைஞர்களின் மூத்த உறுப்பினர்கள் 6 பேர் கவுரவிக்கப்பட்டனர்.
சங்கத்திற்கு புதிதாக WWW.SISDSAU.COM என்ற இணையதளமும் துவங்கப்பட்டது.
இந்த சங்கத்திற்கு தயாரிப்பாளர் தாணு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார்.
விழாவில் பேசிய இயக்குநர் விக்ரமன், ஸ்டன்ட் காட்சிகளில் சற்று நிதானத்தை கடைபிடியுங்கள். ரத்ததானம், கண்தானம் செய்த அனைவருக்கும் நன்றி என்றார்.