வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஸ்டன்ட் யூனியன் துவங்கப்பட்ட 51வது தினம் சென்னை வடபழனியில் கொண்டாடப்பட்டது. இதில் விஜய் சேதுபதி, விக்ரமன், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கண் சிகிச்சை முகாம் உள்ளிட்ட இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஏராளமான கலைஞர்கள் ரத்ததானம், கண்தானம் செய்தனர்.
நடிகர் விஜய் சேதுபதியும் ரத்ததானம் செய்து ஆச்சர்யப்படுத்தினார். பின்னர் பேசிய விஜய் சேதுபதி, படப்பிடிப்பின் போது சண்டைக்காட்சிகளில் எங்களுக்காக எவ்வளவோ ரத்தத்தை நீங்கள் இழந்துள்ளீர்கள். உங்களுக்காக இந்த விழாவில் நானும் கலந்து கொண்டு ரத்ததானம் செய்ததை நன்றிக்கடனாக நினைக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் இதுப்போன்று மற்றவர்களையும் செய்ய வலியுறுத்துவேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டன்ட் கலைஞர்களின் மூத்த உறுப்பினர்கள் 6 பேர் கவுரவிக்கப்பட்டனர்.
சங்கத்திற்கு புதிதாக WWW.SISDSAU.COM என்ற இணையதளமும் துவங்கப்பட்டது.
இந்த சங்கத்திற்கு தயாரிப்பாளர் தாணு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார்.
விழாவில் பேசிய இயக்குநர் விக்ரமன், ஸ்டன்ட் காட்சிகளில் சற்று நிதானத்தை கடைபிடியுங்கள். ரத்ததானம், கண்தானம் செய்த அனைவருக்கும் நன்றி என்றார்.