ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த ஜனவரி மாதம் மோகன்லால் மகன் பிரணவ் ஹீரோவாக அறிமுகமான 'ஆதி' படம் வெளியானது. ஜீத்து ஜோசப் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு அறிமுக நடிகரின் படம் வெளியாகி ஒரு மாதம் தாண்டி ஓடுவதே சிரமம் என்கிற நிலையில் தற்போது 1௦௦வது நாளை நோக்கி ஓடிக்கொண்டு இருப்பதுடன், 5௦ கோடி ரூபாய் வசூலையும் தாண்டி மலையாள திரையுலகையே வாய்பிளக்க வைத்துள்ளது 'ஆதி'.
துல்கர் சல்மான், பஹத் பாசில் ஆகிய வாரிசு நடிகர்கள் அறிமுகமானபோது கூட இப்படி ஒரு அதிசயம் நடந்ததில்லை. ஆனால் மோகன்லால் மகன் பிரணவ் நடித்த 'ஆதி' அதை சாத்தியமாக்கி இருக்கிறது. ஒரு அறிமுக ஹீரோவின் படம் 5௦ கோடி வசூலிப்பது என்கிற பெருமையை மலையாள திரையுலகிலேயே, ஏன் இந்திய திரையுலகிலேயே முதல் ஆளாக பிரணவ் மோகன்லால் தான் பெறுகிறார் என்றே சொல்லலாம்.