ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'விரைவில் சகோதரர் சமுத்திரக்கனி நடிக்க, நான் இயக்க இணைவதென முடிவானது' ட்விட்டரில் பதிவிட்டார் சீனு ராமசாமி. அதுவே அவருக்கு நெகட்டிவ்வாக மாறியது. அப்படியானால், விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட 'மாமனிதன்' படம் என்னவானது? அந்தப்படம் ட்ராப்பாகிவிட்டதா என்ற கேள்வி எழுந்ததும் பதறிவிட்டார் சீனுராமசாமி.
இது குறித்து சீனு ராமசாமியிடம் கேட்டபோது விளக்கம் அளித்தார்.. “விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' படத்தை இயக்கி பிறகே, சமுத்திரக்கனி படத்தை இயக்க உள்ளேன். சமுத்திரக்கனி நடிக்கும் படங்களில் சமுதாயக் கருத்துகள் நிறைந்து இருக்கும். நாங்கள் இணையும் படமும் பரபரப்பான படமாக இருக்கும். 'கண்ணே கலைமானே' ரிலீஸுக்குப் பிறகு விஜய் சேதிபதி நடிக்கும் 'மாமனிதன்' ஷூட்டிங் தொடங்கும்” என்றார்.
விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி ஏற்கனவே மூன்று படங்களில் இணைந்துள்ளனர். இந்தக் கூட்டணி நான்காவது முறையாக இணையும் படம் 'மாமனிதன்'. 'தர்மதுரை' சூப்பர் ஹிட் வெற்றியால், இந்தப் படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
சமுத்திரக்கனி தற்போது 'நாடோடிகள் 2' படத்தை இயக்கி வருகிறார். சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
இந்தப்படத்தை முடித்த பிறகே சீனுராமசாமியின் படத்தில் இணைகிறார் சமுத்திரக்கனி.