தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'விரைவில் சகோதரர் சமுத்திரக்கனி நடிக்க, நான் இயக்க இணைவதென முடிவானது' ட்விட்டரில் பதிவிட்டார் சீனு ராமசாமி. அதுவே அவருக்கு நெகட்டிவ்வாக மாறியது. அப்படியானால், விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட 'மாமனிதன்' படம் என்னவானது? அந்தப்படம் ட்ராப்பாகிவிட்டதா என்ற கேள்வி எழுந்ததும் பதறிவிட்டார் சீனுராமசாமி.
இது குறித்து சீனு ராமசாமியிடம் கேட்டபோது விளக்கம் அளித்தார்.. “விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' படத்தை இயக்கி பிறகே, சமுத்திரக்கனி படத்தை இயக்க உள்ளேன். சமுத்திரக்கனி நடிக்கும் படங்களில் சமுதாயக் கருத்துகள் நிறைந்து இருக்கும். நாங்கள் இணையும் படமும் பரபரப்பான படமாக இருக்கும். 'கண்ணே கலைமானே' ரிலீஸுக்குப் பிறகு விஜய் சேதிபதி நடிக்கும் 'மாமனிதன்' ஷூட்டிங் தொடங்கும்” என்றார்.
விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி ஏற்கனவே மூன்று படங்களில் இணைந்துள்ளனர். இந்தக் கூட்டணி நான்காவது முறையாக இணையும் படம் 'மாமனிதன்'. 'தர்மதுரை' சூப்பர் ஹிட் வெற்றியால், இந்தப் படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
சமுத்திரக்கனி தற்போது 'நாடோடிகள் 2' படத்தை இயக்கி வருகிறார். சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
இந்தப்படத்தை முடித்த பிறகே சீனுராமசாமியின் படத்தில் இணைகிறார் சமுத்திரக்கனி.