பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்படன அல்லவா..? அதில் சிறந்த ஆடியோகிராபிக்கான விருது 'வில்லேஜ் ராக்ஸ்டார்' படத்தில் பணியாற்றிய மல்லிகா தாஸ் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது அதிர்ச்சியை வெளிபடுத்தியுள்ளார் சவுன்ட் டிசைனரான, ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி.
“தேர்வு கமிட்டியில் இருக்கும் பலருக்கும் ஒலிப்பதிவாளருக்கும் ஒலி வடிவமைப்பாளருக்குமான வித்தியாசம் என்பது தெரியவில்லை. இந்த குழப்பம் சிறந்த ஆடியோகிராபி விருதுக்கான நபரை தேர்வு செய்வதிலும் பிரதிபலித்திருக்கிறது. ஆடியோகிராபி தொடர்பான எந்த கருவியையுமே தொட்டிராத நபருக்குத் தான் இந்தமுறை விருது வழங்கப்பட்டுள்ளது என்பது வெட்ககேடானது. விருது தேர்வுக்கான குழுவில் தகுதி வாய்ந்த தொழிநுட்ப வல்லுனர்களையும் இடம்பெற செய்ய வேண்டும்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரசூல் பூக்குட்டி