பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். 1998-ம் ஆண்டு படப்பிடிப்புக்காக ஜோத்பூர் சென்றபோது அரிய வகை மானை வேட்டையாடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
20 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் ஏப்., 5-ம் தேதி இவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து இரண்டு நாளில் ஜாமினில் வெளியே வந்தார். வெளிநாடு செல்லக்கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் சல்மான் வெளியே வந்தார்.
இந்நிலையில் மே 25 முதல் ஜூலை 10 வரை கனடா, நேபாளம், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டியிருப்பதால் அனுமதி கேட்டு ஜோத்பூர் நீதிமன்றத்தில் இன்று(ஏப்.,17) மனு தாக்கல் செய்திருந்தார் சல்மான். இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், சல்மானை வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டது.