ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். 1998-ம் ஆண்டு படப்பிடிப்புக்காக ஜோத்பூர் சென்றபோது அரிய வகை மானை வேட்டையாடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
20 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் ஏப்., 5-ம் தேதி இவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து இரண்டு நாளில் ஜாமினில் வெளியே வந்தார். வெளிநாடு செல்லக்கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் சல்மான் வெளியே வந்தார்.
இந்நிலையில் மே 25 முதல் ஜூலை 10 வரை கனடா, நேபாளம், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டியிருப்பதால் அனுமதி கேட்டு ஜோத்பூர் நீதிமன்றத்தில் இன்று(ஏப்.,17) மனு தாக்கல் செய்திருந்தார் சல்மான். இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், சல்மானை வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டது.