பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக சரிகமப என்ற இசை நிகழ்ச்சி நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சியில் பாடகர், பாடகிகளுக்கு பல சுற்று போட்டிகள் நடந்தது. இளைஞர்களுடன் ரமணியம்மாள் என்ற 63 வயது பாட்டியும் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.
இறுதி சுற்றுக்கு ஸ்ரீநிதி, சஞ்சய், ரமணியம்மாள், வர்ஷா, ஜாஸ்கரன் சிங் ஆகியோர் தேர்வானார்கள். 5 பேருமே போட்டி போட்டு பாடல்களை பாடினார்கள். இறுதியில் வர்ஷா டைட்டில் வென்றார்.
கேராளவைச் சேர்ந்த வர்ஷா, சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் படித்தவர், சில படங்களில் பாடவும் செய்திருக்கிறார். டைட்டில் வென்றது குறித்து வர்ஷா கூறும்போது "ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். இந்த டைட்டில் என் பாட்டு பயணத்தின் அடுத்த கட்டத்தை துவக்கி இருக்கிறது. தொடர்ந்து பாடுவேன். சின்னத்திரையிலும் பாடுவேன். சினிமாவிலும் பாடுவேன். என்னை தேர்வு செய்த நடுவர்கள், வாக்களித்த இசை ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி" என்றார்.