மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் பார்த்திபனுக்கு சொந்தமான வீடு ஒன்று திருவான்மியூரில் உள்ளது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ள பார்த்திபன், வீட்டின் முன்பகுதியில் தனது அலுவலகத்தை நடத்தி வந்தார். கதை விவாதம், நடிக்கும் படத்தின் கதை கேட்பது, திரைக்கதை எழுதுவது உள்ளிட்ட பணிகளை தனது உதவியாளர்களுடன் சேர்ந்து இந்த அலுவலகத்தில் செய்து வந்தார்.
தனக்கு வழங்கப்பட்ட பரிசுகள், தங்க பதக்கங்கள், மற்றும் சேமிப்புக்காக சில தங்க பிஸ்கட்டுகளையும் அலுவலத்தில் வைத்திருந்திருக்கிறார். நேற்று முன்தினம் இரவில் இந்த அலுவலகத்திற்குள் புகுந்த திருடர்கள், பதங்கங்கள், பரிசுபொருட்கள், தங்க பிஸ்கட்டுகளை திருடிச் சென்று விட்டார்கள். இதுகுறித்து பார்த்திபன் திருவான்மியூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரத்து வருகிறார்கள். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு அறிவிக்கப்படவில்லை.