தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் பார்த்திபனுக்கு சொந்தமான வீடு ஒன்று திருவான்மியூரில் உள்ளது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ள பார்த்திபன், வீட்டின் முன்பகுதியில் தனது அலுவலகத்தை நடத்தி வந்தார். கதை விவாதம், நடிக்கும் படத்தின் கதை கேட்பது, திரைக்கதை எழுதுவது உள்ளிட்ட பணிகளை தனது உதவியாளர்களுடன் சேர்ந்து இந்த அலுவலகத்தில் செய்து வந்தார்.
தனக்கு வழங்கப்பட்ட பரிசுகள், தங்க பதக்கங்கள், மற்றும் சேமிப்புக்காக சில தங்க பிஸ்கட்டுகளையும் அலுவலத்தில் வைத்திருந்திருக்கிறார். நேற்று முன்தினம் இரவில் இந்த அலுவலகத்திற்குள் புகுந்த திருடர்கள், பதங்கங்கள், பரிசுபொருட்கள், தங்க பிஸ்கட்டுகளை திருடிச் சென்று விட்டார்கள். இதுகுறித்து பார்த்திபன் திருவான்மியூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரத்து வருகிறார்கள். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு அறிவிக்கப்படவில்லை.