தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராம் சரண் ஹீரோவாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடிக்க, சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தெலுங்குப் படம் 'ரங்கஸ்தலம்'. இந்தப் படத்தில், காதல் காட்சிகளில் ராம் சரணுடன் படு நெருக்கமாக நடித்ததோடு, முத்தக் காட்சியிலும் நடித்திருக்கிறார் சமந்தா.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரங்கஸ்தலம் படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ரங்கஸ்தலம் படத்தில் முத்தக்காட்சியில் நடித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
'திருமணமான பிறகு முத்தக் காட்சியில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டீர்கள்?' என்ற கேள்விக்கு சாமர்த்தியமாக பதில் அளித்துள்ளார் சமந்தா.
“திருமணமான நடிகர்கள் முத்தக் காட்சியில் நடித்தால் மட்டும் யாரும் கேள்வி கேட்பதில்லை. அதுவே நடிகைகள் என்றால் மட்டும் ஏதேதோ கேட்கிறீர்கள்” என்பதுதான் சமந்தாவின் பதில்.
அதோடு “நான் ராம் சரணின் கன்னத்தில் தான் முத்தமிட்டேன். கேமரா ட்ரிக்ஸில் அதை லிப் லாக் காட்சியாக மாற்றிவிட்டார்கள்” என்று முத்தக்காட்சி எடுக்கப்பட்ட ரகசியத்தையும் போட்டு உடைத்துவிட்டார் சமந்தா.