'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
திரையுலகத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு வரும் பெண்களிடம் பாலியல் ரீதியாக தவறாக அணுகுபவர்கள் மீதான குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஆங்கிலத்தில் 'கேஸ்டிங் கௌச்' என அழைக்கப்படும் இந்த விவகாரத்தால் தெலுங்குத் திரையுலகம் தற்போது ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது.
நடிகை ஸ்ரீரெட்டி, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என குற்றம் சாட்டி சில புகைப்படங்களை வெளியிட்டார், தனது ஆடைகளைக் களைந்து போராட்டம் நடத்தினார். அவருக்கு எதிராகத் தடை விதித்த தெலுங்கு நடிகர்கள் சங்கம் உடனடியாக அந்தத் தடையை நீக்கியது. மனித உரிமை கமிஷன் அதில் தலையிட்டதும் காரணமாக அமைந்தது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக சில முன்னணி டாப் நடிகர்கள் மீதும் பலவிதமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பெரிய நட்சத்திரக் குடும்பத்து கடைசி தம்பி, போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் என சில பெண்கள் அவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்கள். இந்த பட்டியல் இன்னும் அதிகமாகும் என டோலிவுட் வட்டாரம் மிரண்டு போய்க் கிடக்கிறதாம். இவற்றையெல்லாம் எப்படி தடுத்து நிறுத்துவது என பலரும் குழம்பிப் போயிருக்கிறார்களாம்.
அடிக்கும் வெயிலை விட இந்த விவகாரம் தான் மிகவும் 'ஹாட்' ஆக இருக்கிறது என்கிறார்கள்.