டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜயகாந்த் சினிமாவில் நடிக்க தொடங்கி 40 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகில் உள்ள சுரசங்காவில் நேற்று நடந்த இந்த விழாவில் வேல்ஸ் பல்கலைகழக இணை வேந்தர் ஐசரி கணேசன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, மனோபாலா, விக்ரமன், நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், நாசர், மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விஜயகாந்தின் செல்வாக்கிற்கு காரணம் கலைப்பணியா, அரசியல் பணியா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. விஜயகாந்த் பற்றிய சிறப்பு குறும்படம் திரையிடப்பட்டது. இறுதியில் விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.
இந்த விழாவில் விஜயகாந்துடன் நடித்த நடிகர், நடிகைகள், அவருடன் பிரபலமாக இருந்தவர்கள், குறிப்பாக ரஜினி, கமல் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.